தில்லியில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த சகோதரர்கள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் கருவி, 115 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை அவர்களிடமிருந்து கைப்பற்றினர்.
ஆக்ஸிஜன் செறிவூட்டியை கள்ளச் சந்தையில் பதுக்கி பின்னர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஜானக்புரி பகுதியைச் சேர்ந்த 2 சகோதரர்கள் உள்பட சாகர்பூர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் ஜானக்புரி பகுதியில் கிடங்கு வைத்து ஆக்ஸிஜன் உபகரணங்களையும், செறிவூட்டிகளையும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், ஆக்ஸிஜன் வழங்கும் கருவி, 115 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


