ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தில்லி வந்தடைந்த 2-வது 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்'

மேற்கு வங்கத்திலிருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் தில்லி வந்தடைந்தது.

News image
தில்லி வந்தடைந்த 2-வது 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்'
Updated On :4 மே 2021, 5:27 am

DIN

மேற்கு வங்கத்திலிருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் தில்லி வந்தடைந்தது.

தில்லிக்கு ரயில் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு வருவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 70 டன் ஆக்ஸிஜன் ரயில் மூலம் தில்லிக்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது மேற்கு வங்கத்தின் துர்காபூர் பகுதியிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் அனுப்பப்பட்ட 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தில்லி ஒஹிலா பகுதியை வந்தடைந்தது.

தில்லியின் பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் பிரித்து அனுப்பப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.