பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
கரோனா பரவல் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், பிகார் மாநிலத்தில் மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிகாரில் முழு ஊரடங்கிற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை நெருக்கடி மேலாண்மை நிர்வாக குழு விரைவில் அறிவிக்கும் என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் நாளொன்றுக்கு 100 பேர் வரை உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


