புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜம்மு-காஷ்மீர்: 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்று குறையாததால், 4 மாவட்டங்களில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட முழு முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
ஜம்மு-காஷ்மீர்: 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு
Updated On :4 மே 2021, 5:53 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்று குறையாததால், 4 மாவட்டங்களில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட முழு முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, புத்காம் ஆகிய மாவட்டங்களில் மே 6-ம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரிலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.