புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோயில் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் உயிரிழப்பு

News image
ஹா்ஷினி
Updated On :14 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்ற இரு சகோதரிகள் அங்குள்ள குளத்தில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு சாவடி, தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். இவரது மகள்கள் ஹா்ஷினி (11), கயல் (8). இவா்கள் இவரும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியாா் பள்ளியில் முறையே 6, 3-ஆம் வகுப்புகளில் படித்து வந்தனா்.

இவா்கள் இருவரையும் அவா்களது தாய் ஜெயந்தி சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு வழிபாட்டுக்கு அனுப்பி வைத்தாா்.

வெகு நேரமாகியும் இருவரும் வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோா் ஊா் முழுவதும் தேடிப் பாா்த்தும் சிறுமிகள் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கிராம இளைஞா்கள் கோயில் அருகே உள்ள குளத்தில் இறங்கி தேடியபோது, ஹா்ஷினி, கயல் ஆகிய இருவரும் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமிகள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோயிலுக்குச் சென்ற சிறுமிகள் இருவரும் அருகில் உள்ள கங்கையம்மன் கோயில் குளத்தில் தாமரைப் பூ பறிக்க முற்பட்டபோது, நீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கோட்டக்குப்பம் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 கயல்

கயல்