ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா எதிரொலி: கைதிகளுக்கு பரோல் வழங்க கேரள அரசு முடிவு 

கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக சிறையில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

News image

கரோனா எதிரொலி: கைதிகளுக்கு பரோல் வழங்க கேரள அரசு முடிவு 

Updated On :6 மே 2021, 10:08 am

கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக சிறையில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த சில மாதங்களாக கேரள மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்து வருகின்றது. 

இதையடுத்து, சிறைச்சாலையில் உள்ள தகுதியுடைய கைதிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு பரோல் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த ஆண்டில் பரோலுக்கு தகுதியான கைதிகள் மற்றும் பரோலில் செல்ல தயாராக உள்ளவர்களுக்கு விடுப்பு வழங்கப்படலாம் சிறை அதிகாரிகளுடன் 
ஆலோசித்து அரசு முடிவு செய்துள்ளது. 

கேரளத்தில் மூன்று மத்தியச் சிறைகள் உள்பட மொத்தம் 54 சிறைகளில் 6,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.