தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆக்ஸிஜன் சிலிண்டர் எனக் கூறி தீயணைப்பானை விற்ற மூவர் கைது

தில்லியில் வண்ணம் பூசப்பட்ட தீயணைப்பானை ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று கூறி முறைகேடாக விற்பனை செய்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

News image

ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று கூறி தீயணைப்பானை விற்ற மூவர் கைது

Updated On :6 மே 2021, 6:59 am

தில்லியில் வண்ணம் பூசப்பட்ட தீயணைப்பானை ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று கூறி முறைகேடாக விற்பனை செய்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தில்லியின் அலிபூர் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

அதில், தீயணைப்பானிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்று வண்ணமடித்து அதனை ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்வதாக புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் சோதனையிட்ட காவல் துறையினர் தீயணைப்பானுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்று கருப்பு வண்ணமடித்துக்கொண்டிருந்த மூவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.