கரோனா நிவாரணப் பணிகளில் 42 விமானப் படை விமானங்கள்
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில், கரோனா நிவாரணப் பணிகளில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 42 விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில், கரோனா நிவாரணப் பணிகளில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 42 விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
மருத்துவ மற்றும் நிவாரணப் பொருள்களைக் கொண்டுச் செல்லும் பணியில் இந்த விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்றும், வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு வரும் பணியிலும் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 75 ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்திய விமானப் படையின் வைஸ் மார்ஷல் எம். ராணாடே தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் உள்நாட்டுக்குள் மருத்துவப் பொருள்கள் மற்றும் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...