எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறையுங்கள்: உச்ச நீதிமன்றம்

சிறைச்சாலைகளில் கடந்த ஆண்டு யாரெல்லாம் பிணை அல்லது பரோலில் விடுவிக்கப்பட்டனரோ அவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சிறைச்சாலைகளிலிருந்து கூட்ட நெரிசலைக் குறையுங்கள்; உச்ச நீதிமன்றம்
Updated On :8 மே 2021, 10:30 am

DIN


புது தில்லி: நாட்டில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறைச்சாலைகளில் கடந்த ஆண்டு யாரெல்லாம் பிணை அல்லது பரோலில் விடுவிக்கப்பட்டனரோ அவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மார்ச் மாதம் சிறைச்சாலைகளிலிருந்து பரோல் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்ட அனைவரையும், தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் எந்தவிதமான மறுஆய்வும் இன்றி உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக பரோல் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளை 90 நாள்கள் பரோலில் விடுவிக்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு லட்சம் சிறைக் கைதிகளின் நலனைக் காக்கும் வகையிலும், அவர்களும் நலமாக வாழ உரிமை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.