காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஐஐடி ஜோத்பூரில் 29 பேருக்கு கரோனா பாதிப்பு 

ஐஐடி ஜோத்பூரில் 25 மாணவர்கள் உள்பட 29 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :11 மே 2021, 10:49 am

PTI

ஐஐடி ஜோத்பூரில் 25 மாணவர்கள் உள்பட 29 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக துணை பதிவாளர் அமர்தீப் சர்மா கூறியதாவது, 

கடந்த மே 5-ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா சோதனையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 29 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது.  இதையடுத்து, வளாகத்தில் மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் செய்முறைத் தேர்விற்காக வந்ததால், தொற்று வளாகத்தில் மேலும் பரவத் தொடங்கியது என்று அவர் கூறினார்.

பொதுவாக, மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பல மாநிலங்களில் பொது முடக்கம்  அறிவிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும், ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்து வருகின்றது. மேலும் வளாகத்தில் தனிமைப்படுத்தும் மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

கல்லூரிக்கு வரும் ஒவ்வொரு மாணவர் மற்றும் ஊழியர்களின் மாதிரிகள் சோதனை எடுத்து, அறிக்கை வரும்வரை அவர்களைத் தனிமை மையத்தில்  வைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.