'உலக அளவிலான கரோனாவில் இந்தியாவில் 50% பாதிப்பு'
கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 50 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 50 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா இறப்பில் இந்தியாவில் 30 சதவிகிதம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக பதிவான கரோனா பாதிப்புகள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில், தெற்காசியாவில் இந்தியாவில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகி வருவது தெரியவந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி அதன் அண்டை நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கரோனா குறைந்து வரும் நிலையில்,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 9-வது வாரமாக கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...