விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

'உலக அளவிலான கரோனாவில் இந்தியாவில் 50% பாதிப்பு'

கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 50 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

News image
உலக அளவிலான கரோனாவில் இந்தியாவில் 50% பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
Updated On :13 மே 2021, 2:30 pm

DIN

கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 50 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா இறப்பில் இந்தியாவில் 30 சதவிகிதம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக பதிவான கரோனா பாதிப்புகள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தெற்காசியாவில் இந்தியாவில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகி வருவது தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி அதன் அண்டை நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கரோனா குறைந்து வரும் நிலையில்,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 9-வது வாரமாக கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.