கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இன்று 41,779 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 41,779 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இன்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,30,267 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 35,879 போ் இன்று வீடு திரும்பினா். இதுவரை 15,10,557 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 5,98,605 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 373 போ் இன்று உயிரிழந்தனா். இதுவரை 21,085 போ் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.