டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெங்களூரு: ஒரு மாதத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா ஊரடங்கை மீறியதாக கடந்த 35 நாள்களில் 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :17 மே 2021, 10:34 am

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா ஊரடங்கை மீறியதாக கடந்த 35 நாள்களில் 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பெங்களூருவில் நேற்று முதல்முறையாக 10 ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகியது. எனினும் தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.

இதனிடையே கடந்த 35 நாள்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் துறை தெரிவித்துள்ளது. 

கர்நாடகத்தில் ஒரு நாளில் மட்டும் 31,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 8,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 16-ம் தேதிக்கு பிறகு பெங்களூருவில் முதல்முறையாக 10 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.