ஒடிசா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகின்றது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
ஒடிசா மாநிலத்தில் புதிதாக 10,757 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,22,981 ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும் 22 பேர் புதிதாக பலியாகியுள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 2,335 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1,06,061 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நோய்த் தொற்று பாதித்து கடந்த 24 மணி நேரத்தில் 12,077 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம்
இதுவரை 5,14,532 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.