ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!

பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி துணை முதல்வர் சுநேத்ரா பவார் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

News image

மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:45 pm IST

பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி துணை முதல்வர் சுநேத்ரா பவார் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றாா்.

பிறகு தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தாா். இதனிடையே அஜீத் பவார் மற்றும் பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டிலே ஆகியோரின் மறைவால் காலியான, புணேவின் பாராமதி மற்றும் அகிலயநகரின் ரஹுரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் துணை முதல்வர் சுநேத்ரா பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக ஏப்ரல் 6ஆம் தேதி தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. பாராமதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

வேட்புமனு தாக்கல் நிகழ்வின்போது, ​​முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் உடனிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 2019 பேரவைத் தேர்தலில், அஜீத் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.