தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.பி. ஃபோர்ட் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

News image

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து வெளியேற்றப்படும் நோயாளிகள்

Updated On :20 மே 2021, 9:37 am

DIN

திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.பி. ஃபோர்ட் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

எஸ்.பி. ஃபோர்ட் மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நோயாளிகளை வெளியேற்றும் பணிகளில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

   தீ விபத்து ஏற்பட்டதையடுத்து வெளியேற்றப்படும் நோயாளிகள்  

   தீ விபத்து ஏற்பட்டதையடுத்து வெளியேற்றப்படும் நோயாளிகள்  

தீ விபத்து பெரிதாக இல்லை என்ற போதிலும் உணவகத்தில் ஏற்பட்ட புகை, நோயாளிகள் இருக்கும் இடத்தில் புகுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வந்து 15 நிமிடத்தில் தீயை அணைத்தனர். 

மருத்துவமனை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து

மருத்துவமனை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி டி.பிரவீன் கூறுகையில், சமையல் செய்யும் போது சமையல் எண்ணெயிலிருந்து தீ விபத்து ஏற்பட்டது. அறை சிறியதாக இருப்பதால் தீ வேகமாக பரவியத்துடன் புகைமூட்டம் அதிகரித்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.