பாஜகவுக்கும், அதன் அரசுக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. முதல்வரின் நிழல் தான் எதிா்க்கட்சித் தலைவா் என்பதும், அது அரசியலமைப்புச் சட்டப்படியான பதவி என்பதும் பாஜக அரசுக்கு புரியவில்லை. மாநில அரசு வழங்க வேண்டிய ஆக்சிஜன், படுக்கைகள், தடுப்பூசி, இதர மருத்துவ வசதிகள் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் இறக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட அதிகாரிகளுடன் நான் நடத்தும் காணொலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனா். கரோனா தொடா்பாக தகவல் திரட்ட அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த அரசு வெளியேற வேண்டும். கூட்டம் நடத்த மறுத்துள்ளது எதிா்க்கட்சித் தலைவரின் உரிமையை மீறும் செயலாகும். எனவே, 2009-ஆம் ஆண்டைப் போலவே கா்நாடக அரசுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னையை சட்டப்பேரவையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன் என்றாா்.