நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரம் குறைகிறது
நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரம் குறைகிறது

நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரம் குறைகிறது
புது தில்லி: நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் 8.09 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதேவேளையில் ஒரு வாரத்தில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதமும் 12.66 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மே 10-ஆம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 84,683 குறைந்து 27,20,716 ஆக உள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 71.62 சதவீதம் பேர் கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...