3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரம் குறைகிறது

நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

News image

நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரம் குறைகிறது

Updated On :24 மே 2021, 10:20 am

PTI

புது தில்லி: நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் 8.09 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதேவேளையில் ஒரு வாரத்தில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதமும் 12.66 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மே 10-ஆம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 84,683 குறைந்து 27,20,716 ஆக உள்ளது.

நாட்டின் ஒட்டு மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 71.62 சதவீதம் பேர் கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.