தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மருத்துவக் கட்டணம் செலுத்தாததால் உடல்களைத் தர மறுப்பதா? கர்நாடக அரசு எச்சரிக்கை

மருத்துவக் கட்டணத்தை செலுத்தாத உறவினர்களிடம், கரோனாவால் பலியானோரின் உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

News image
Updated On :25 மே 2021, 12:12 pm

DIN


பெங்களூரு: மருத்துவக் கட்டணத்தை செலுத்தாத உறவினர்களிடம், கரோனாவால் பலியானோரின் உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

மருத்துவக் கட்டணத்தை செலுத்தாததால், கரோனாவால் பலியாவோரின் உடல்களைத் தர தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக எழும் புகார் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் கர்நாடக அரசு, அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில சுகாதரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், உயிரிழக்கும் கரோனா நோயாளிகளின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்க, எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.