ஆந்திரம்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
கரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


கரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனிடயே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களுக்கு கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வு தொடர்பாக ஜூலை மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...