ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் சிகிச்சை வழங்கும் இணையதளம் தொடக்கம்

ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.

News image
ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் சிகிச்சை வழங்கும் இணையதளம் தொடக்கம்
Updated On :27 மே 2021, 8:17 am

PTI


புது தில்லி: ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.

ஆன்லைன் மூலம் புறநோயாளிகளாக ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்களும், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற வழிவகை செய்யும் இந்த இணையதளம் மூலம், மருத்துவமனைகளில் அதிகமானோர் குவிவது தடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுபோன்றதொரு மிக இக்கட்டான சூழ்நிலையில், ராணுவ வீரர்களின் நலனை உறுதி  செய்யும் இதுபோன்றதொரு சேவை மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றிலிருந்து நாடு விடுபட, ராணுவப் படையின் பங்களிப்பு மிகச் சிறந்தது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.