தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தில்லியில் ரெம்டெசிவிர் அதிக விலைக்கு விற்ற 2 செவிலியர்கள் கைது

தில்லியில் ரெம்டெசிவிர் ஊசியை அதிக விலைக்கு விற்றதாக தனியார் மருத்துவமனை செவிலியர்கள் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

News image

கோப்புப்படம்

Updated On :28 மே 2021, 11:21 am

தில்லியில் ரெம்டெசிவிர் ஊசியை அதிக விலைக்கு விற்றதாக தனியார் மருத்துவமனை செவிலியர்கள் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரோஹினியில் வசிக்கும் அவிச்சல் அரோரா(30), ஷாலிமார் பாக் நகரில் வசிக்கும் பிரதீப் பரத்வாஜ்(34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் ரெம்டெசிவிர் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பரத்வாஜிடமிருந்து வைரஸ் தடுப்பு மருந்தினை பாயல் சவுத்ரி மூலம் ரூ.30,000-க்கு வாங்கியதாகவும், அவற்றை ரூ.40,000-க்கு விற்றதாகவும் அரோரா தெரிவித்தார். பர்த்வாஜ் ஷாலிமார் பாக் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். மேலும் ஆறு ஊசிகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டன என்று துணை காவல் ஆணையர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.

பரத்வாஜ் மற்றும் சவுத்ரி ஷாலிமார் பாக் தனியார் மருத்துவமனையின் கரோனா வார்டில் செவிலியராக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஷாபாத்பால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.