மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: பிரதமர்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 மே 2021, 1:39 pm

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுபற்றி வெளியான அறிவிப்பு:

"கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக் கடனுக்கு உதவிகள் வழங்கப்படும். அதற்கான வட்டி, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும். 

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதைக் கடக்கும் வரை ரூ. 5 லட்சம் மதிப்பில் இலவச காப்பீடு வழங்கப்படும். அதற்கான தொகை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்படும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.