சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
வகங்கை மாவட்டம் மானாமதுரைச் சோ்ந்த விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி


சென்னை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரைச் சோ்ந்த விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் பொறுப்பு டிஜிபி ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.
மானாமதுரையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்பவரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, பாலத்தில் இருந்து கீழே விழுந்து, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை சோ்க்கப்பட்ட ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
சிபிசிஐடிக்கு மாற்றம்: இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் பொறுப்பு டிஜிபி ஜி.வெங்கடராமன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில், சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குக்குரிய ஆவணங்களை மதுரை மாநகர காவல் துறையினரிடம் பெற்று விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...