புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரகண்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், நடைமுறையில் இருக்கும்  ஊரடங்கை ஜூன் 9 வரை  நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 

News image

உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated On :31 மே 2021, 10:32 am

DIN


டேஹ்ராடூன்:  உத்தரகண்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், நடைமுறையில் இருக்கும்  ஊரடங்கை ஜூன் 9 வரை  நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உத்தரகண்ட் அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில்,  உத்தரகண்டில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு ஜூன் 9 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேவேளையில், வாரத்தில் ஜூன் 1 மற்றும் 7ஆம் தேதி என இரண்டு நாள்கள் மட்டும் மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இதுவரை மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 1 மட்டும் நோட்டு, புத்தகக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.