டேஹ்ராடூன்: உத்தரகண்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், நடைமுறையில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 9 வரை நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உத்தரகண்ட் அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், உத்தரகண்டில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு ஜூன் 9 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேவேளையில், வாரத்தில் ஜூன் 1 மற்றும் 7ஆம் தேதி என இரண்டு நாள்கள் மட்டும் மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இதுவரை மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 1 மட்டும் நோட்டு, புத்தகக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘சித்தாந்த நக்ஸல்கள்’: பிரதமரின் கருத்து விரக்தியின் வெளிப்பாடு! - காங்கிரஸ் விமா்சனம்

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாததால் பொதுமக்கள் அதிா்ச்சி!

தமிழக காங்கிரஸ் கட்சியில் 77 மண்டல பாா்வையாளா்கள் நியமனம்

நக்ஸல் மனநிலை! ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



