மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரகண்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், நடைமுறையில் இருக்கும்  ஊரடங்கை ஜூன் 9 வரை  நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 

News image

உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated On :31 மே 2021, 4:02 pm IST


டேஹ்ராடூன்:  உத்தரகண்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், நடைமுறையில் இருக்கும்  ஊரடங்கை ஜூன் 9 வரை  நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உத்தரகண்ட் அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில்,  உத்தரகண்டில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு ஜூன் 9 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேவேளையில், வாரத்தில் ஜூன் 1 மற்றும் 7ஆம் தேதி என இரண்டு நாள்கள் மட்டும் மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இதுவரை மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 1 மட்டும் நோட்டு, புத்தகக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.