கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்று (அக்-31) ஞாயிற்றுக்கிழமை சார்ஜா , துபை , பக்ரைன் பகுதிகளிலிருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவர்களில் 7 பயணிகளைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் கடத்தி வந்த 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கைதான ஏழு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் . அவரிடமிருந்து 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் நடந்த இந்தக் கடத்தலில் கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக கடந்த அக்-27 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

ஓடிடியில் கருப்பு எப்போது?
குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்

ஐபோன் 18 ப்ரோ சிறப்புகள் என்னென்ன? எத்தனை நிறங்களில் கிடைக்கும்?
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!



