கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்று (அக்-31) ஞாயிற்றுக்கிழமை சார்ஜா , துபை , பக்ரைன் பகுதிகளிலிருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவர்களில் 7 பயணிகளைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் கடத்தி வந்த 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கைதான ஏழு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் . அவரிடமிருந்து 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் நடந்த இந்தக் கடத்தலில் கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக கடந்த அக்-27 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு! விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை: விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்

கரூா் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 வழக்குகளில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆஜா்

திருச்சியில் ஈஎஸ்ஐ துணை மண்டல அலுவலக பணியை துரிதப்படுத்த மத்திய அமைச்சரிடம் துரை வைகோ மனு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



