ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இ-ஷ்ரம் கார்டுக்கு ரூ. 100 செலுத்தியதாக புகாரளித்த பெண்; கோபமாக வெளியேறிய அமைச்சர்?

அரசு நிகழ்வில் பெண் ஒருவர் புகார் அளித்ததால் மத்திய  அமைச்சர் அதிருப்தியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :1 நவம்பர் 2021, 12:44 pm

DIN

அரசு நிகழ்வில் பெண் ஒருவர் புகார் அளித்ததால் மத்திய  அமைச்சர் அதிருப்தியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய அளவிலான தரவுத்தளம் (டேட்டா பேஸ்) ஒன்றை உருவாக்க மத்திய அரசு ‘இ-ஷ்ரம்’ என்கிற இணையதள சேவையை அறிமுகப்படுத்தியது.

சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களை தொழிலாளர்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தவும் ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் தொழிலார்களின் விவரம் பதிவேற்றப்பட்டு கார்டு வழங்கப்படும்.

இந்நிலையில், தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டுகளை வழங்கும் நிகழ்வு பிகார் மாநிலம் பாட்னாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு கார்டுகளை வழங்கினார். 

அப்போது, கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டனவா? என்று அமைச்சர் கேட்டதற்கு ரூ. 100 செலுத்தியதாக முகம்மதுபூர் பகுதியைச் சேர்ந்த கிரண் தேவி என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். 

கார்டுகளை அச்சடித்து வழங்குவதற்கு மத்திய அரசு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ரூ. 20 வழங்குகிறது. தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றே மத்திய அரசு கூறியிருந்த நிலையில், பெண்மணி கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் உடனடியாக இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அமைச்சர் கோபமாக அதிருப்தியில் அங்கிருந்து கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.