பஞ்சாப் தேர்தல்: பாஜகவுடன் அமரீந்தர் கூட்டணி?

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூட்டணி உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூட்டணி உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தருக்கும் காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இடையே மோதல் நிலவி வந்த நிலையில், அமரீந்தர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் கட்சியிலிருந்து விலகினார்.

இதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் பாஜகவுடன் கூட்டணி வைப்போம் என அமரீந்தர் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று காலை பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, மோடிக்கு நன்றி தெரிவித்து அமரீந்தர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது பாஜகவும் அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸும் கூட்டணி வைப்பது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com