உலக மீன்வள தினமான நேற்று(நவ.21) இந்தியாவின் சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
உலக மீன்வள தினமான நேற்று(நவ.21) ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மத்திய மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா விருதை அறிவித்தார்.
இதையும் படிக்க | உலக மீன்வள தின கருத்தரங்கு
அதில் நாட்டின் சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரமும், உள்நாட்டு மீன்வளத்துறையில் சிறந்த மாநிலமாக தெலுங்கானாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் மத்தியபிரதேசத்தின் பாலாகாட், உள்நாட்டு மீன்வளத்துறையில் சிறந்த மாவட்டமாகவும் ஒடிசாவின் பாலோசோர் சிறந்த கடல்சார் மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டன.
சிறந்த மலைசார் மற்றும் வடகிழக்கு மாநிலமாக திரிபுராவும், அசாம் மாநிலத்தின் போன்கைகான் சிறந்த மாவட்டமாகவும் தேர்வு செய்யப்பட்டன.