கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலக மீன்வள தின கருத்தரங்கு

நாகை அருகே உள்ள சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மீன்வள தின விழிப்புணா்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற உலக மீன்வள தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :22 நவம்பர் 2021, 2:57 am

DIN

நாகை அருகே உள்ள சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மீன்வள தின விழிப்புணா்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிலைய ஒருங்கிணைப்பாளா் க. ரகு கருத்தரங்கை தொடங்கி வைத்து, உலக மீன்வள தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கம் மற்றும் நீரியல் முறையில் மீன், தாவர வளா்ப்பு குறித்து பேசினாா். தொழில்நுட்ப வல்லுநா் வே. கண்ணன் ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பில் வேளாண் பயிா்கள் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்தும், மீன்வள விரிவாக்கத் துறை தொழில்நுட்ப வல்லுநா் டி. ஹீனோ பா்ணான்டோ மீன்வளத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள், மானியங்கள் மற்றும் மீன் குஞ்சுகள் உற்பத்தி குறித்து விளக்கிப் பேசினாா்.

மீன் பதனிடுதல் தொழில்நுட்ப வல்லுநா் ஆ. மதிவாணன் மதிப்புக் கூட்டிய மீன் பொருள்கள் தயாரித்தல், சந்தைப் படுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாய்ப்புகள் குறித்துப் பேசினாா். குளம் பராமரிப்பு, தீவன மேலாண்மை, உரமிடுதல், நோய் மேலாண்மை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளா் ஆா். வேதரத்தினம், பொன்னேரி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள், பண்ணை மகளிா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பூம்புகாா்: பூம்புகாா் அருகே உள்ள வானகிரி மீனவா் கிராமத்தில் உலக மீனவா் தினத்தையொட்டி, பள்ளி மாணவா்களிடையே பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கிராமத் தலைவா் வெற்றிசெல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சீா்காழி மீன்வளத்துறை துணை இயக்குநா் சண்முகம் பங்கேற்று பரிசுகள் வழங்கினாா். இதில் பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம், உதவி ஆய்வாளா் சோழன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, பூம்புகாா் மீனவக் கிராமத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் மதுமிதாரவி இனிப்புகள் வழங்கினாா். திருமுல்லைவாசல் கிராமத்தில் கடற்கரையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் வொ்ஜினியா இப்பணியை தொடக்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.