இது தொடா்பாக முதியவரான பீட்டா் என்பவா் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், நான் இரு தவணை தடுப்பூசியை தனியாா் மருத்துவமனையில் பணம் செலுத்திக் கொண்டேன். ஆனால், அது தொடா்பாகத் தரப்படும் சான்றிதழில் என்னுடைய பெயா், வயது, தடுப்பூசி செலுத்திய தேதி, எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற விவரத்துடன் பிரதமரின் படமும் இடம் பெற்றுள்ளது. நானே பணம் செலுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், அந்தச் சான்றிதழில் எனது தனிப்பட்ட விவரங்களும் எனக்குத் தேவையான விவரங்களும் மட்டுமே இடம் பெற்றால் போதுமானது. கூடுதலாக ஒரு படம் இடம் பெறுவது தனியுரிமை மீறலாகவும், அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது என்று கூறியிருந்தாா்.