எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நாட்டில் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு

நாட்டில் சுமார் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,579 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
நாட்டில் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு
Updated On :23 நவம்பர் 2021, 9:15 am

DIN


புது தில்லி: நாட்டில் சுமார் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,579 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 7,579
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,26,480
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32​​​​​​​% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 236. 
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,66,147.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,13,584. இது கடந்த 2020, மார்ச் மாதத்துக்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தினசரி கரோனா உறுதியாகும் விகிதம் 0.79% ஆக உள்ளது. இது கடந்த 50 நாள்களுக்கும் மேலாக 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

வாராந்திர கரோனா உறுதியாகும் விகிதம் 0.93% ஆக உள்ளது. இத கடந்த 60 நாள்களாக 2% சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் என்பது கரோனா பரிசோதனை செய்யும் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்று உறுதியாகும் விகிதமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.