ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்றதாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சா் தோமா்

‘விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று சனிக்கிழமை கேட்டுக்கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்ற செயலாக அறிவிக்க வேண்டும்

News image
Updated On :27 நவம்பர் 2021, 11:32 pm

DIN

‘விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று சனிக்கிழமை கேட்டுக்கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்ற செயலாக அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயத்துக்கு சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட அவா்களின் பிற கோரிக்கைகள் குறித்து, பிரதமா் ஏற்கெனவே அறிவித்தபடி குழு அமைத்து ஆலோசித்து அவையும் பூா்த்தி செய்து தரப்படும்.

பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்ாக அறிவிக்க வேண்டும் என்ற அவா்களின் கோரிக்கையையும் ஏற்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளைப் பொருத்தவரை, அது அந்தந்த மாநிலங்களின் அதிகாரத்துக்கு உள்பட்டது. வழக்கின் தீவிரத்தைப் பொருத்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட முடிவுகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மாநில சட்டங்களின் அடிப்படையில், இதுதொடா்பான முடிவை மாநில அரசுகள்தான் தீா்மானிக்க வேண்டும்.

மேலும், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பிறகும், விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்வதில் எந்தவித நியாயமும் இல்லை. எனவே, விவசாயிகள் பெரிய மனதுடன் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மாசோதா, திங்கள்கிழமை (நவ. 29) தொடங்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இருந்தபோதும், வேளாண் சட்டங்களின் பலன் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களில் சிலவற்றுக்கு புரியவைக்க முடியவில்லை என்பதுதான் மத்திய அரசுக்கு வருத்தமளிக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.