தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மம்தா பானர்ஜியுடன் சஞ்சய் ரௌத், ஆதித்ய தாக்கரே சந்திப்பு

​சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 12:35 pm

DIN


சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ஆதித்ய தாக்கரே கூறியது:

"அவரை (மம்தா) மும்பைக்கும், மகாராஷ்டிரத்துக்கும் நாங்கள் வரவேற்றோம். எப்போதுமே நட்பு இருந்திருக்கிறது. 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பை வந்தபோதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஆனால், அவரை மும்பைக்கு வரவேற்பதற்காகவே வந்தோம்."

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் மும்பை சென்றார். மத்தியில் உள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே மம்தா பானர்ஜி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.