வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் டிசம்பர் 15வரை பள்ளிகள் மூடல்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழலில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் டிசம்பர் 15வரை பள்ளிகள் மூடல்
Updated On :30 நவம்பர் 2021, 10:33 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழலில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த நவம்பர் 24அம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தன.

தற்போது ஒமைக்ரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.