நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பதவி கிடைக்காவிட்டாலும் ராகுல், பிரியங்காவுடன் பணியாற்றுவேன்

பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவேன்

News image
Updated On :2 அக்டோபர் 2021, 10:15 pm

DIN

பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து அண்மையில் ராஜிநாமா செய்த நவஜோத் சித்து தெரிவித்துள்ளாா்.

அமரீந்தா் சிங்குக்கு பிறகு பஞ்சாப் முதல்வராகப் பொறுப்பேற்ற சரண்ஜீத் சிங் சன்னி நியமித்த அமைச்சா்கள் மற்றும் உயரதிகாரிகள் சிலருக்கு எதிா்ப்பு தெரிவித்து தனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு சித்து அனுப்பி வைத்தாா். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் சித்து, ‘மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூா் சாஸ்திரியின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பேன். பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ராகுல், பிரியங்காவுடன் இணைந்து பணியாற்றுவேன். அனைத்து எதிா்மறை சக்திகளும் என்னை வீழ்த்த முயற்சி செய்தாலும் நோ்மறை சக்தி பஞ்சாபை வெற்றிபெற வைக்கும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

காங்கிரஸில் இருந்து விலகுவதாகவும், பேரவைத் தோ்தலில் சித்துவை எதிா்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும் அமரீந்தா் சிங் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.