பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு: உச்சம் தொட்டது

நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் செவ்வாயன்று உயர்ந்ததால், உச்சம் தொட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு: உச்சம் தொட்டது
பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு: உச்சம் தொட்டது
Updated on
1 min read


புது தில்லி: நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் செவ்வாயன்று உயர்ந்ததால், உச்சம் தொட்டுள்ளது.

பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்ததால், தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.64க்கு விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் 24 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.67க்கு விற்பனையாகிறது.

கொல்கத்தாவில் 29 காசுகள் உயர்ந்து ரூ.103.36க்கும், சென்னையில் ரூ.100.23க்கும் விற்பனையாகிறது.

அதுபோலவே, டீசல் விலையும் சுமார் 30 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.07க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.98.80க்கும் கொல்கத்தாவில் ரூ.94.17க்கும், சென்னையில் ரூ.95.59க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com