திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஆசிரியர்கள் கொலை எதிரொலி: காஷ்மீரில் போராட்டம்

காஷ்மீரில் 2 பள்ளி ஆசிரியர்கள் சுட்டுகொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.

News image
ஆசிரியர்கள் கொலை எதிரொலி: காஷ்மீரில் போராட்டம்
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

DIN

காஷ்மீரில் 2 பள்ளி ஆசிரியர்கள் சுட்டுகொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் நேற்று(அக்-7) காலை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது பள்ளிக்குள் புகுந்த இரண்டு தீவிரவாதிகள், தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் ஆகியோரை அறைக்கு வெளியே அழைத்து வந்து சுட்டுக்கொன்றனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போராட்டதில் ஈடுபட்டவர்களில் ஒருவர் , ‘ மிகவும் மனிதத்தன்மையற்ற இச்செயலை செய்தவர்களுக்கு அரசாங்கம் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் சீக்கியவர் என்பதால் சீக்கிய கூட்டமைப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதல் குறித்து மாநில காவல்துறை தலைவர் தில்பாக் சிங் ‘ காஷ்மீரில் பிரிவினையை ஏற்படுத்தவே இம்மாதிரி பொதுமக்கள் மீது வன்முறை நிகழ்த்தப் படுகிறது’ எனத் தெரிவித்தார்.

சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.