மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விமானப்படை தினம்: 2019-ல் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்

இந்திய விமானப் படையில் பயிற்சியில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழங்கினார். 

News image

அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)

Updated On :8 அக்டோபர் 2021, 10:41 am


இந்திய விமானப் படையில் பயிற்சியில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழங்கினார். 

அருணாசலில் கடந்த 2019-ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை வீரர் ராஜேஷ் குமார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

இந்நிலையில் விமானப்படை தினத்தையொட்டி அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சென்று வழங்கினார். 

பின்னர் அவர் பேசியதாவது, உயிரிழப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது. எனினும் பொருளுதவி செய்வது வீரம் மிக்க குடும்பத்திற்கு சற்று உதவிகரமாக இருக்கும்.

தில்லி அரசு சார்பில் உயிரிழந்த வீரரின் சகோதரிக்கு பாதுகாப்புத் துறையில் பணியாணை வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டது.

நாட்டிற்கு சேவையாற்றியவரது குடும்பத்திற்கு அரசால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.