டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 அக்டோபர் 2021, 2:35 am

DIN

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை ஞாயிற்றுக்கிழமையும் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகளும் அதிகரிக்கப்பட்டது.

இந்த விலை உயா்வைத் தொடா்ந்து ஒரு லிட்டா் பெட்ரோல் மும்பையில் ரூ.110.12-க்கும், தில்லியில் ரூ.104.14-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.101.53-ஆக அதிகரித்தது.

மும்பை, ஹைதராபாத்தை தொடா்ந்து குஜராத் தலைநகா் காந்திநகா், லடாக் தலைநகா் லேயிலும் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது. ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.100.66-ஆகவும், ஹைதராபாதில் ரூ.101.27-ஆகவும், காந்திநகரில் ரூ.100.21-ஆகவும், லேயில் ரூ.100.06-ஆகவும் அதிகரித்தது.

சத்தீஸ்கா் தலைநகா் ராய்ப்பூா், மத்திய பிரதேசம் தலைநகா் போபால், ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரிலும் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது.

சென்னையில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.97.26-க்கும், தில்லியில் ரூ.92.82-க்கும் விற்பனையானது.

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

ராஞ்சியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.98.66-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017-ஆண்டு ஜூன் மாதம் முதல் அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில் தினந்தோறும் 4 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என்று அண்மையில் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (ஒபெக்) முடிவு செய்தது. இதையடுத்து சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 82 டாலா்களுக்கும் (சுமாா் ரூ.6,100) அதிகமாக உயா்ந்தது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.