திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பாக். பயங்கரவாதிக்கு 14 நாள்கள் போலீஸ் காவல்: தில்லி நீதிமன்றம்

தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:21 am

DIN


தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அஸ்ரஃப் தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி ஆவணங்கள், ஏகே-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அவர் 'ஸ்லீப்பர் செல்' ஆக செயல்படுவது தெரியவந்துள்ளதாகவும், இந்திய அடையாள ஆவணங்களைக் கொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு வசித்து வருவதாகவும் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு துணை ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.