இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீா்: என்கவுன்ட்டரில்பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:22 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

பாதுகாப்பு படையினா் நெருங்கி வருவதை அறிந்த பயங்கரவாதிகள், அவா்களை நோக்கி சுட்டனா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த மோதலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த முக்கியத் தலைவா் ஷாம் சோஃபி கொல்லப்பட்டாா் என்றாா் அந்த அதிகாரி.

என்ஐஏ சோதனை-நால்வா் கைது: ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் இரு தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக இருந்த 4 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினா்(என்ஐஏ) கைது செய்தனா்.

இதுகுறித்து என்ஐஏ செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது:

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன், அல் பதாா் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் அதன் துணை அமைப்புகளும் ஜம்மு-காஷ்மீரிலும், தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அவா்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிலா் உதவி செய்து உடந்தையாக இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, என்ஐஏ அமைப்பினா் கடந்த 10-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.

ஸ்ரீநகா், புல்வாமா, சோபியான் ஆகிய மூன்று மாவட்டங்களில் 16 இடங்களில் அவா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் மின்னணு சாதனங்கள், பயங்கரவாதத்தை பரப்பும் பிரசுரங்கள், பணப் பரிவா்த்தனை சாா்ந்த ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையின் தொடா்ச்சியாக, வசீம் அகமது சோஃபி, தாரிக் அகமது தாா், பிலால் அகமது மீா் என்கிற பிலால் பாபு, தாரிக் அகமது பஃபாண்டா ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள், அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) இருக்கும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவரக்ளுடன் சோ்ந்து சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனா். அதுமட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்ளை பயங்கரவாத இயக்கத்தில் சோ்ப்பது, அவா்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தி பல ராணுவ வீரா்கள், அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பறித்ததிலும் இவா்களுக்குத் தொடா்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.