இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள 13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில், 1.11 லட்சம் குடிநீர் மாதிரிகள் மாசடைந்தவை என்பது தெரிய வந்துள்ளதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

News image
13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்
Updated On :28 ஜனவரி 2024, 4:23 am

PTI


புது தில்லி: அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள 13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில், 1.11 லட்சம் குடிநீர் மாதிரிகள் மாசடைந்தவை என்பது தெரிய வந்துள்ளதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் குடிநீர் பரிசோதனை மற்றும் ஆய்வுத் திட்டத்தின் கீழ் 13 லட்சம் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரும் இந்த பரிசோதனையில் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதில், அவற்றிலும் ஆர்செனிக், ஃப்ளோரைட், இரும்பு, யுரேனியம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருந்ததாகவும், நிலத்தில் உரம் தெளிப்பது, பூச்சிக் கொல்லி மருந்துகள் போடுவது, கழிவுகளை கொட்டுவது போன்றவற்றால், நிலத்திலேயே ரசாயனங்கள் கலந்து, இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரிலும் ரசாயனங்கள் கலந்திருப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலோக உற்பத்தி அல்லது சையனைடு போன்ற ரசாயன ஆலைகளுக்கு அருகிலிருக்கும் நீர்நிலைகளில் கூட மாசுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 13,17,028 குடிநீர் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதித்ததில், 1,11,474 மாசடைந்தவை என்பது தெரிய வந்துள்ளது. குடிநீர் மாதிரிகள் பரிசோதனையில் தோல்வியடைந்தால், அதிகாரிகள் இது குறித்து ஆன்லைன் மூலம் தகவல் அளித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.