முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் நவ. 1 முதல் இயக்கம்
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நவம்பர் 1 முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நவம்பர் 1 முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமான நாடு முழுவதும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நோய்த்தொற்று குறைந்ததையடுத்து முன்பதிவில்லா பெட்டிகளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில்,
“ரயில்களில் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும். முதற்கட்டமாக 23 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும்.
ராமேஸ்வரம் - திருச்சி, திருச்சி - ராமேஸ்வரம், சென்னை - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - சென்னை, பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி - பாலக்காடு டவுன், கண்ணூர் - கோவை, கோவை - கண்ணூர், நாகர்கோவில் - கோட்டயம், கோட்டயம் - நாகர்கோவில், கோவை - மங்களூர், மங்களூர் - கோவை, நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர்கோவில், திருச்சி - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - திருச்சி உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...