ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜகவிலிருந்து மீண்டும் திரிணமூலில் இணைந்த மேற்குவங்க முன்னாள் அமைச்சர்

மேற்குவங்க மாநில முன்னாள் அமைச்சர் ராஜிப் பானர்ஜி பாஜகவிலிருந்து மீண்டும் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 9:36 am

DIN

மேற்குவங்க மாநில முன்னாள் அமைச்சர் ராஜிப் பானர்ஜி பாஜகவிலிருந்து மீண்டும் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

நடப்பு ஆண்டு மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணமூலில் கட்சியில் இருந்த மூத்த நிர்வாகி ராஜிப் பானர்ஜி, பாஜகவில் இணைந்தார். டோம்ஜூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 

இதையடுத்து இன்று திரிணமூல் கட்சியின் மூத்தத் தலைவரும் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் மீண்டும் திரிணமூல் கட்சியில் இணைந்தார். 

அதுபோல, திரிபுரா பாஜக முன்னாள் எம்எல்ஏ ஆஷிஷ் தாஸும் இன்று திரிணமூலில் இணைந்தார். இதன்பின்னர் பேசிய ஆஷிஷ் தாஸ், 'மக்களுக்கு வேலை செய்யவே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், பாஜகவினர் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில்லை. அதுமட்டுமின்றி பிரதிநிதிகளை வேலை செய்யவும் விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக நான் பாஜகவுக்கு எதிராகவே பல போராட்டங்களை நடாத்தியுள்ளேன். தற்போது என்னுடைய மக்களுக்கு சேவை செய்யவே இக்கட்சிக்கு வந்துள்ளேன்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.