ஆந்திரம் : காவல் நிலையத்தில் ரூ.16 லட்சம் திருடிய காவலர் கைது
ஆந்திரத்தில் பணி செய்து கொண்டிருந்த காவல் நிலையத்திலேயே ரூ.16 லட்சம் திருடிய காவலரை சென்னையில் கைது செய்தனர்.


ஆந்திரத்தில் பணி செய்து கொண்டிருந்த காவல் நிலையத்திலேயே ரூ.16 லட்சம் திருடிய காவலரை சென்னையில் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்வித் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஜனார்த்த நாயுடு என்பவர் கடந்த ஆக-29 ஆம் தேதி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் காரணமாக வைக்கப்பட்ட ரூ.16 லட்சத்தை திருடியுள்ளார். ஆனால் இச்சம்பவம் செப்-2 ஆம் தேதியே தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிக்க | மனைவி உள்பட 3 பெண்களை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்!
பணத்தை எடுத்துக் கொண்டு விடுமுறையில் சென்ற காவலரை செல்போனில் தொடர்பு கொண்ட காவல்துறையினருக்கு கைப்பேசி சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டது தெரிந்ததும் தேடுதலில் ஈடுபட்டனர்.
தனிப்படை தேடுதலில் தற்போது இன்று (செப்-6) ரூ.14 லட்சத்துடன் சென்னையில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
திருட்டிற்கான காரணத்தை விசாரித்த போது சில நாட்களாகவே ஜனார்த்தன் நாயுடு குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.
மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...