மேற்கு வங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி, பவானிப்பூர் இடைத்தேர்தலுக்கு மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்யவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் சுவெந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். பின் தன் தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதையும் படிக்க | நான் பவானிபூரில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? சுவேந்து அதிகாரி
மேலும் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா எதிலும் தோல்வி அடையவில்லை என்பதும் பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக இந்தத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

புதுச்சேரியில் கவியரங்கம், விருதுகள் வழங்கும் விழா

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


