டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிரதமர் மோடிக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளை தெரிவித்தாரா ஓவைசி?

உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுள்ள மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, பிரதமர் மோடி குறித்து அநாகரிகமான கருத்து தெரிவித்ததாக அம்மாநிலத காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :10 செப்டம்பர் 2021, 10:43 am

DIN

பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி மதவாதத்தை தூண்டும் விதமாக அநாகரிகமான கருத்துகளை தெரிவித்ததாகவும் கரோனா விதிகளை மீறியதாகவும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் வியாழக்கிழமை இரவு பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து, பாரபங்கி நகர காவல்நிலையத்தில் ஓவைசிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மதத்தின் அடிப்படையில் இருப்பிரிவினருக்கிடையே பகைமையை தூண்டியது, அரசு அலுவலர்களின் உத்தரவை மீறியது என ஓவைசிக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பாரபங்கி காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக ஓவைசி பேசினார். 100ஆண்டு காலம் பழமை வாய்ந்த ராம் சனேஹி காட் மசூதியை அரசு நிர்வாகம் இடித்ததாக தெரிவித்தார். இது உண்மைக்கு புறம்பானது. பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அநாகரிகமான, அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளை தெரிவித்தார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.