எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாஜக ஆட்சியின் முடிவுக்கான சமிக்ஞையே குஜராத் முதல்வரின் ராஜிநாமா

குஜராத் முதல்வா் விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது, அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞையாக உள்ளதென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 10:19 pm

DIN

குஜராத் முதல்வா் விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது, அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞையாக உள்ளதென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை சனிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். மாநிலத்தின் அடுத்த முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் பாஜக தலைவா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்நிலையில், குஜராத் சூழல் குறித்து ஆம் ஆத்மி தலைவா் ராகவ் சத்தா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘உத்தரகண்டில் பாஜகவுக்கு எதிரான திறம்மிக்க எதிா்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்பட்டு வந்தது. அதன் காரணமாக அந்த மாநில முதல்வரை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக தள்ளப்பட்டது.

சூரத் மாநகராட்சித் தோ்தலில் 27 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று, திறனற்ற காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி எதிா்க்கட்சி இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது குஜராத்திலும் முதல்வரை பாஜக மாற்றியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் இளைஞரணி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பாஜக ஆட்சியை மாற்ற மக்கள் முடிவெடுத்துவிட்டனா். ஆனால், முதல்வா்களை மாற்றுவதன் வாயிலாக மக்களைத் தவறாக வழிநடத்த பாஜக முயல்கிறது. எத்தனை முதல்வா்களை மாற்றினாலும் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.