எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீட் தோ்வு தொடங்கியது; தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 

News image
Updated On :12 செப்டம்பர் 2021, 8:36 am

DIN

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கரோனா பரவலால் மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ், பஞ்சாபி, மலையாளம் மொழிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டு 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 

தமிழகத்தில் இருந்து நீட் தோ்வை எழுத, 1,10,971 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், 40,376 மாணவா்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனா். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார். தமிழகத்தில் 18 நகரங்களில் 224 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 

இன்று பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்கி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டன. கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் தேர்வு நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.